பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி

267 0

பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணி மாலைகளுக்கான போராட்டம் அல்ல என அருட்தந்தை யேசப் மேரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான நீதிகோரிய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி கடந்த மூன்றாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான நேற்று திருகோணமலையில் நிறைவுபெற்றுள்ளது.

இந்நிலையிலேயே, மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் யேசு சபையின் மூத்த குருவும், தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான அருட்தந்தை யேசப் மேரி அடிகளார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்

இந்நிலையில், மாலைகளை வாங்கி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.