வெல்லம்பிட்டிய வெலேவத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதார்.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற வேளையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் சிறு காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.