சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது

292 0

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை குறித்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.