யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவருக்கு கொவிட்-19: வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

281 0

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஐவர் உட்பட 7 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் கா ண ப் ப ட் டு ள் ள ன ர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கை நெறி பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் காத்தான்குடி, கல்முனை, மூதூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6ஆவது தொற்றாளர் கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வரும்போது சாவகச்சேரியில் வீதியில் மறித்து பி.சி.ஆர். மாதிரி பெறப்பட்டவர் என்றும் 7ஆவது தொற்றாளர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.