இலங்கையில் இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

218 0

இலங்கையில் இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த தினத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் உட்பட 5,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அத்தோடு, நேற்றைய தினம் மாத்திரம் 36 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக இதுவரையில் 95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஓப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்தியா  இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது.

குறித்த தடுப்பூசிகள் ஜனவரி 28 ஆம் திகதி நாட்டுக்க கொண்டவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60,000 பேருக்கு இதுவரை அஸ்ட்ரா ஜெனகா (AstraZeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட எவருக்கும் குறிப்பிடத்தக்களவு ஒவ்வாமை ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படும் முறைமையின் கீழ் நாட்டின் சனத்தொகையில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.