இத்தாலியை உலுக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது

312 0

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 11,252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா தொற்றுக்கு 237 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.