சென்னை விமான நிலையத்தில் 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

295 0

வெளிநாட்டில் இருந்து வந்த 8 பயணிகளிடம் 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான 4.15 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து விமான பயணிகள் மூலம் தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. அவர்களை குறிவைத்து சுங்க அதிகாரிகள் பிடிப்பதுடன், தங்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இன்று வளைகுடாவில் இருந்து வந்த விமான பயணிகள் 8 பேரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தங்கத்தை பேஸ்ட்-ஆக உருக்கி மாத்திரியைாக விழுங்கி கொண்டு வந்துள்ளனர். அதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
கடத்தி வரப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்த மொத்த தங்கத்தின் மதிப்பு 2.17 கோடி ரூபாய் (4.15 கிலோ) ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களில் ஏழு பேரை கைது செய்தனர்.