டொமினிக் ஜீவாவுக்கு கொரோனா தொற்று!

241 0

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி காலமானார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவரது சடலம் நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பொரளையில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது.  டொமினிக் ஜீவா, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த வியாழனன்று கொழும்பில் காலமானார்.

1940 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறையில் கால் பதித்த டொமினிக் ஜீவா ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார்.