வவுனியாவில் ஒரே நாளில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

236 0

வவுனியாவில் ஒரே நாளில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, ‘கோவிஷெல்ட்’ தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஊழியர்கள்கள் மற்றும் இராணுவத்தினருக்கு ஏற்றும் பணி நேற்று (சனிக்கிழமை) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலை மற்றும் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது 297 பேர் வவுனியா வைத்தியசாலை சார்ந்தவர்களிற்கும் 108 பேர் சுகாதார துறை சார்ந்தவர்களுமாக 405 பேருக்கு வவுனியா வைத்தியசாலை யிலும், 500 இராணுவத்தினருக்கு வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் தடுப்பூசி  செலுத்தப்பட்டது.

இதேவேளை இன்றையதினம் ஏனையவர்களிற்கு தடுப்பூசி  செலுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.