அச்சுவேலியில் 8 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

302 0

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 8கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண்மணி நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருடைய கணவர் பிரதேச சபை ஒன்று சாரதியாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மாவட்டகுற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சோதனையிட்டபோது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்