கிளிநொச்சியில் மாணவன் மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

227 0

கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவன், அங்கிருந்த மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சகோதரிகள் இருவர் பாடசாலைக்கு சென்றுவிட, தாய் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.