வங்கியொன்றில் கொள்ளையிட்ட விமானப்படை சிப்பாய் கைது!

213 0

கிராமிய வங்கியில் கொள்ளையிட்டு தப்பி சென்ற விமானப்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

காலி அம்பலாங்கொடை – உஸ்முதுலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கைக்குண்டு ஒன்றைய காண்பித்து குறித்த வங்கியின் முகாமையாரை அச்சுறுத்தி அங்கிருந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் போலித் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த நபரை இன்றைய தினம் பலப்பிடிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.