தொற்று நோய்கள் வைத்தியசாலையின்(IDH)மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற முதல் சுகாதார அதிகாரி ஆனார்.
தொற்று நோய் வைத்தியசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின்போது அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேவேளை தொற்று நோய் வைத்தியசாலையின் மூத்த பெண் தாதி ஒருவரே தடுப்பூசியைப் பெற்ற இரண்டாவது சுகாதார அதிகாரி ஆவார்.
இது தொடர்பில் கருத்துக் கூறிய மருத்துவர் விஜேவிக்ரம, தடுப்பூசி குறித்து மக்களிடையே ஏற்படும் ஏதாவது அச்சங்கள் மற்றும் சந்தேகங்களைத் தணிக்கும் முதலாவது நபராகும் வாய்ப்பை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.