முள்ளியவளை பகுதியில் இருந்து பெருந்தொகை பீரங்கி குண்டுகள் மீட்பு!

261 0

முள்ளியவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளினால் மறைத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும், பயன்படுத்த முடியாத பீரங்கி குண்டுகளை இராணுவம் இன்று (28) மீட்டுள்ளது.

152 மி.மீ பீரங்கி குண்டுகள் 110ம், 122 மி.மீ பீரங்கி குண்டுகள் 36ம், 152 மி.மீ பீரங்கி குண்டுகள் 49ம், 122 மி.மீ பீரங்கி குண்டுகள் 29ம் இதில் அடங்குவதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 9வது இயந்திரவியல் பிரிவே இவற்றை மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.