சிறிலங்காவில் நேற்று மட்டும் இலங்கையில் 892 பேருக்கு கொரோனா தொற்று – கொழும்பில் 298 பேர் அடையாளம்

236 0

சிறிலங்காவில்  நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 892 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 298 பேர் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் 203 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொம்பனித்தெரு மற்றும் மட்டக்குளிய பகுதிகளில் தலா 24 பேரும், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 21 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வத்தளையில் 26 பேரும், ஜா எலவில் 21 பேரும், ராகமவில் 19 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.