கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனைய விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.