ராஜஸ்தானில் வாகன விபத்து: 8 பேர் பலி- 4 பேர் காயம்

213 0

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் டிரக் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் இன்று அதிகாலை டிரக் மீது வாகனம் ஒன்று மோதியது. அதில் அந்த வாகனத்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனத்தின் டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநிலங்களில் தற்போது பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.