மீடியாகொடை கொலை சம்பவம் – 4 சந்தேகநபர்கள் சரண்!

218 0

மீடியாகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி மேற்படி கொலைச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், இதன்போது கொலை செய்யப்பட்ட இளைஞனின் கை துண்டாக வெட்டப்பட்டிருந்தது.

சந்தேகநபர்கள மீடியாகொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொலைக்காக பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 02 கத்திகள், வாள் ஒன்று மற்றும் மன்னா கத்தியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மீடியாகொடை பிரதேசத்தை சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மீடியாகொடை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.