யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

189 0

 யாழ்.நீர்வேலி பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் கோடாரி கொத்துக்கு இலக்காகி காயமடைந்த சகோதரர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு வீட்டுக்குள் புகுந்து சகோதரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.