யோசித – கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு – பல முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை

219 0

பிரதமர் அலுவலகத்தின் பிரதானி யோசித ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் இதனை பதிவிட்டுள்ள அவர் பரந்துபட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கு ஒத்துழைப்பையும் சமூக பொருளாதார முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தோம் என அவர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.