இன்று காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமை

214 0

நாட்டில் இன்று(25) காலை 6.00 மணிமுதல் புதிதாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை- அம்பலாந்தொட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலக்கம் 140 பொலான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மல்கோனிய பகுதி  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை-1 C , கல்முனை-1 E, கல்முனை- 2 கல்முனை- 2 A, கல்முனை 2 B, கல்முனை- 3A ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை- 1 MD, மற்றும் கல்முனை குடி- 1, கல்முனை குடி- 2 , கல்முனை-3 MD ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.