கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

197 0

கொவிட் தொற்றாளர்களாக நேற்று(24) அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 843 தொற்றாளர்களில் 480 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் 86 பேரும், களுத்துறையில் 72 பேரும், கண்டியில் 35 பேரும், காலியில் 40 பேரும், கேகாலையில் 06 பேரும், இரத்தினபுரியில் 12 பேரும், அம்பாறையில் 16 பேரும், மாத்தறையில் 17 பேரும், வவுனியாவில் 06 பேரும், நுவரெலியாவில் 02 பேரும், ஹம்பாந்தோட்டையில் 02 பேரும், குருநாகலில் 04 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.