தீவுப்பகுதியில் காணிகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

232 0

தீவுப்பகுதியில் கடந்த 30 வருடங்களிற்கு மேல் கடற்படையினர் கைவசப்படுத்தியுள்ள நிலங்களை மீள கையளிக்குமாறு கோரி பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வேலணை மண்டைதீவு மற்றும் மண்கும்பான் போன்ற பிரதேசங்களில் சுமார் 30 வருடத்திற்கு மேலாக இலங்கை கடற்படையினரால் அபகரித்து வைத்திருக்கின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி, எதிர்வருகின்ற 25- 01-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 8.00 மணியளவில் பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், மத குருமார்கள், சமுக நலன் விரும்பிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்