கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா…!

193 0

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 139 நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதுடன், இதன்படி, அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 101 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை பதிவான கொவிட்-19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 22,176 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய மாவட்டங்களை பொருத்தவரையில், கண்டி மாவட்டத்தில் 108 பேரும், களுத்துறையில் 66 பேரும், காலி மாவட்டத்தில் 61 பேரும், இரத்தினபுரியில் 39 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 65 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 45 பேரும் நேற்று அதிக கொவிட்-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.