சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சருக்கே கொரோனா தொற்று!!

212 0

சிறிலங்காவில் கோட்டாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாராவின் கொரோனா பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.