இந்திய கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி

226 0

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தடுப்பூசியை விநியோகிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டிற்கு எதிர்வரும் மார்ச் மாதமளவில் கொரேனா தடுப்பூசியினை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.