தற்கொலை குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து மல்கம் ரஞ்சித் கவலை

213 0

சினமென் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின் தொழிற்சாலையி;ல் பணிபுரிந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் கரிசனை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவை பேராயர் இல்லத்திற்கு அழைத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது கவலையை வெளியிட்டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள மல்கம் ரஞ்சித் அவர்கள் என்ன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பத குறித்து கவலை வெளியிட்டுளளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 21 மாதங்களாகின்ற போதிலும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் எவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில் தற்கொலை குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை கவலை அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின்போது இவர்களிற்கு எதிரான ஆதாரங்கள் அவர்களிற்கு சாதகமான விதததில் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொளுமாறும் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.