பூஸ்ஸ சதொச முகாமையாளரை பணிநீக்குமாறு உத்தரவு

227 0

பூஸ்ஸ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் முகாமையாளரை பணிநீக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் பூஸ்ஸ சதொச களஞ்சியத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, விற்பனை நிலையங்களில் காணப்படும் விலையை விட 30 ரூபா குறைவாக சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்த தேயிலை தூள் பெக்கெட்டுக்களை விற்பனை செய்யாது மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனூடாக நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட நிவாரணத்தை பெற்றுக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பூஸ்ஸ சதொச முகாமையாளரை பணி நீக்கம் செய்து முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.