சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது

215 0

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 2 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.