மாத்தறை பரை தீவிற்கு அருகில் கடலோர அரிப்புக்கு பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் குடை, பயன்படுத்தப்பட்ட பால் பெக்கெட்டுக்கள் நான்கும் மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.