கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

231 0

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.