சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்!

227 0

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சு அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தின் முக்கிய இரண்டு சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை பெற்றுக்கொள்ள முடியும். இது அசாதாரண விடயமாக எமக்கு தெரிகின்றது.

இந்த சட்டத்தின் கீழ், சிறு தவறுகளுக்காகவும் சாட்சியாளர்களும் சட்டத்தரணிகளும் அச்சுறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

தற்போது மாகாணங்களிலுள்ள மேல் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குமாறு கோருகின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.