18 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளுடன் சாரதி ஒருவர் கைது

216 0

18 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளுடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த அதிசொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொஸ்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுளளார்.

27 வயதுடைய குறித்த சாரதி பேருந்தினை செலுத்தும் போது பல்வேற இடங்களில் நிறுத்தி போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.