நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

203 0

கொரோனா தொற்றால் அடையாளம் காணப் பட்ட நிலையில் மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

01. தும்முல்ல சூரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான வய தான ஆண் ஒருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொவிட் 19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 ஜனவரி 12 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.

02. கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர். குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொவிட் 19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 ஜனவரி 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03. காலி பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று, சிறுநீரக நோய் மற்றும் சுவாச நோய் காரணமாக 2021 ஜனவரி 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04.கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச் சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் 19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் இரத்தம் உறைந்தமை, இரத்தம் விஷமானது, நுரையீரல் நோய் மற்றும் வலிப்பு காரணமாக 2021 ஜனவரி 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.