இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை அழைத்து அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றது!

218 0

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை இலங்கைக்கு அழைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் புதியவகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்தமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகள் புதியவகை வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களைநாட்டிற்கு அழைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.