முகக்கவசம் அணியாத ஒருவருக்கு கொரோனா

225 0

முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ், 9,000 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் நேற்று முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிக்காத 473 நிறுவனங்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.