சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறிய சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

213 0

முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) முகக்கவசம் அணியாதிருந்த 137 பேர் விரைவான அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்ம 05ஆம் திகதி முதல் இவ்வாறான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய 2 ஆயிரத்து 530 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.