டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

186 0

நோயாளி ஒருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை உறுதியானதையடுத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹட்டனில் வதியும் குறித்த நோயாளி மேற்படி வைத்திய சாலைக்கு கடந்த ஜனவரி 8ஆம் திகதி எக்கோ பரிசோதனைக்காக வந்துள்ளார். பின் அவர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிசிஆர் சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை ஹட்டன் டிக்கோயா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த நோயாளியின் குடும்ப அங்கத்தவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.