சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை!

226 0

வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் போன்றன அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய செயற்படுகின்றனவா என்பது குறித்து ஆராய இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை தொிவித்துள்ளது.

சமூக இடைவெளி பேணுதல், தொற்று நீக்கம் செய்தல் உட்பட சுகாதார விதிமுறைகளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 15ம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.