தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

185 0

ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக கூடுதலான மக்களை பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும். ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப்பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.