சிறிலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது- குமார வெல்கம

232 0

சிறிலங்கா  இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்தால் மக்களிற்கு இராணுவ ஆட்சியே பரிசளிக்கப்படும் என ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் வாக்களித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் உதவியில்லாமல் நாட்டை தற்போது ஆட்சி செய்ய முடியாது என்பது பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே தற்போது தெரியும் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் ஆதரவின்றி தங்களால் பயணிக்க முடியாது என்பது பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு நன்கு தெரிந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.