தகராறு காரணமாக பெண் ஒருவர் வாகனத்தால் மோதி கொலை

188 0

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோட்டார் வாகனம் ஒன்றால் மோதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம – களுத்துறை வீதியின் வெலிமானான பகுதியில் நேற்று (07) இரவு இறுதி சடங்கு நிகழ்வொன்றின் போது இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது நபர் ஒருவர் தனது மோட்டார் வாகனத்தால் பிரச்சினையுடன் தொடர்புடைய பெண்ணை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய குறித்த பெண் வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.