உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

213 0

2020 ஆம் ஆண்டு உயர்தர செய்முறைப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.

செய்முறைப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ளவர்கள் பரீட்சையில் சமூகமளிப்பதற்காக தங்களது பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு 0112 784 208, 0112 784 537, 0113 188 350 அல்லது 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.