யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தபட்டவர்களில் தென்னிலங்கை சேர்ந்த சிலர் அங்கு களவு வேலைகளில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்.
கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள ஆலையத்தில் இருந்த பித்தளையில் செய்யப்பட்ட மணி, விளக்கு , தீபம் போன்ற பொருட்களை களவாடி தமது உடமையில் வைத்திருந்துள்ளனர்
கடமையில் இருந்த சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல் துறையினர் பொருட்களை மீட்டு எடுத்ததுடன் தனிமைப்படுத்த பட்டவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக கல்லூரி சமூகத்தினர் தமது வேதனையை தெரிவித்தனர்.