இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு அடுக்குமாடி வீட்டுத்திட்டம்

193 0

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு நாடெங்கிலும் அடுக்குமாடி தொகுதிகளை அமைக்கும் துரித திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கண்டி, அனுராதபுரம், கம்பஹா ஆகிய பகுதிகளில் முதல் கட்டத்தின் கீழ், 3000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தனியார் துறை விலை மட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வீடுகளை 30 முதல் 40 சதவீதம் வரையிலான குறைந்த விலையில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். இதற்காக 25 வருட கால அவகாசத்திற்கு உட்பட்டவாறு 6.25 சதவீத வட்டியில் கடன் பெறும் வசதிகளும் உண்டென இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.