நல்லூரான் செம்மணி வளைவு’ பொங்கல் தினத்தன்று திறக்கப்படும்!

334 0

நல்லூர் கந்தப் பெருமான் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ‘நல்லூரான் செம்மணி வளைவு’ எதிர்வரும் 14ம் திகதி பொங்கல் தினத்தன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இவ் வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளைவு அமைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்.