பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

219 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருளானந்தம், பைக் பாபு, கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.