வடக்கில் இன்று 13 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி!

247 0

வடக்கு மாகாணத்தில் இன்று 13 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்குக் கற்றலுக்காக வந்த மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் எருக்கலம்பிட்டியில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிச்சூரில் 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றுமுன்தினம் தொற்றுடன் கண்டறியப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் அயல் இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.