உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் இலங்கை கொரோனாவைரசின் மூன்றாவது அலையை வரவேற்றுள்ளது- ஐக்கிய மக்கள் சக்தி

224 0

இலங்கை கொரோனா வைரசின் மூன்றாவது அலையை உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மூலம் வரவேற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்ஜேசி அலாவத்துல்ல இதனை தெரிவித்துள்ளார்

.
இலங்கையில் கொரோனாவைரஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள உக்ரைன் சுற்றுல்லாபயணிகள் புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சுற்றுல்லாப்பயணிகள் குறித்து பொதுமக்களும் விசேட நிபுணர்களும் சந்தேகம் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தல விமானநிலையத்தில் சுற்றுலாப்பயணிகள் வந்துசேர்ந்த வேளை அதனை அரசாங்கம் மிகப்பெரும் நிகழ்வாக காண்பித்தது என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அழைத்துவரப்படவேண்டிய அவசியம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.