கிளிநொச்சியிலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

214 0

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று  காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு மாகாண மக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் எனவும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமது பிள்ளைகளை விடுவிக்கமாறு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.